புதிதாக 724 பேருக்கு கரோனா முதியவர்கள் உட்பட 7 பேர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் புதிதாக 724 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. முதியவர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் நேற்று ஆண்கள் 434, பெண்கள் 290 என மொத்தம் 724 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 208 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 26,261 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை சென்னையில் 2 லட்சத்து 21,573 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 8 லட்சத்து 6,875 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் சென்னையில் 240 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 857 பேர் குணமடைந்து வீடுகளுக்குச் சென்றனர். சென்னையில் 2,182 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 7,164 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அரசு மருத்துவமனைகளில் முதியவர்கள் 4 பேர், தனியார் மருத்துவமனைகளில் 3 என நேற்று7 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம்கரோனாவால் உயிரிழந்தவர் களின் எண்ணிக்கை 12,222 ஆகஉயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 4,045 பேர் இறந்துள்ளனர்.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 2 லட்சத்து 27,800,கோவையில் 53,129, செங்கல்பட்டில் 50,557, திருவள்ளூரில் 43,020என்ற எண்ணிக்கையில் பாதிப்பு நிலவரம் உள்ளது. தமிழகத்தில் 248அரசு மற்றும் தனியார் ஆய்வகங்களில் இதுவரை 1 கோடியே 48 லட்சத்து 24,699 பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. நேற்று மட்டும் 64,080 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அந்தசெய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

44 mins ago

இந்தியா

55 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

39 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

உலகம்

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்