மண்டல விளையாட்டு போட்டி - தேனி கல்லூரி மாணவர்கள் சாதனை :

By செய்திப்பிரிவு

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகளுக்கான 17-வது மண்டல அளவிலான சதுரங்கம் மற்றும் இறகுபந்து போட்டிகள் திண்டுக்கல் பிஎஸ்என்ஏ கல்லூரியில் நடந்தது. இதில் திண்டுக்கல், கரூர், விருதுநகர், தேனி மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரிகள் கலந்து கொண்டன.

நான்கு சுற்றுகளாக நடந்த சதுரங்கப் போட்டியில் தேனி நாடார் சரஸ்வதி கல்லூரி மாணவர்கள் பி.சரண், கே.பார்த்திபன், பி.செல்வராமலிங்கம், ஏ.முகமது இப்திஹர்ஆகியோர் 7 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றனர். இதே போல் இறகுபந்து போட்டியில் வி.காயத்ரி, எம்.காசிவிசாலாட்சி, கே.பிரியங்கா, கே.பிரியசகி ஆகியோர் இரண்டாம் இடம் பெற்று பதக்கம் மற்றும் பரிசுக்கோப்பையை பெற்றனர்.

இவர்களுக்கு கல்லூரியில் பாராட்டு விழா நடந்தது. இதில் மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறைத் தலைவர் கேபிஆர்.முருகன் தலைமை வகிக்க, பொதுச் செயலாளர் டி.ராஜ மோகன், பொருளாளர் எம்.பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கல்லூரிச் செயலாளர் கேஎஸ்.காசிபிரபு, இணைச் செயலாளர் ஏ.ராஜ்குமார், முதல்வர் சி.மதளைசுந்தரம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். படிப்புடன் இதுபோன்ற இதர தகுதிகளையும் வளர்த்துக் கொள்வதின் மூலம் வாழ்க்கையில் எளிதில் வெற்றி பெறலாம் என்று பாராட்டினர்.

துணைமுதல்வர் என்.மாதவன், கல்லூரி பெண்கள் உரிமை அமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஆர்.சரண்யா, உடற்கல்வி இயக்குநர்கள் கே.சுந்தர ராஜன், பி.செல்வக்குமார், ஆர்.மாலினி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

இந்தியா

10 mins ago

சுற்றுச்சூழல்

42 mins ago

தமிழகம்

32 mins ago

சினிமா

40 mins ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்