பழநியில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு நவ.9-ல் நடைபெறவுள்ள சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதியில்லை.
பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா இன்று (நவ.4) தொடங்கி 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. இன்று காலை மலைக்கோயிலில் காப்புக் கட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதில் கரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. காப்புக்கட்டு நிகழ்ச்சி முடிந்த பிறகு பக்தர்கள் வழக்கம்போல் சுவாமி தரிசனம் செய்யலாம். விழா நாட்களில் காலை, மாலை சுவாமி புறப்பாடு மலைக்கோயிலில் நடைபெறும்.
கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நவம்பர் 9-ம் தேதி நடைபெறவுள்ளது. அன்று காலை 11 மணி வரை மட்டுமே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். பகல் 2.45 மணிக்கு வேல்வாங்கும் நிகழ்ச்சியை தொடர்ந்து சன்னதி திருக்காப்பிடப்படும் (நடை சாத்தப்படும்). மாலை 6 மணிக்கு மேல் மலையடிவாரம் கிரிவீதியில் நடைபெறும் சூரசம்ஹார நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதியில்லை. இதைதொடர்ந்து மறுநாள் காலை நடைபெறும் திருக்கல்யாண நிகழ்ச்சியிலும் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதியில்லை.
விழா நாட்களில் மண்டகப் படிகள் அனைத்தும் கோயில் சார்பில் நடத்தப்படவுள்ளது. சூரசம்ஹாரம், திருக்கல்யாண நிகழ்ச்சிகள் அனைத்தும் கோயில் யூ டியூப் சேனல் மற்றும் வலை தளங்கள் வாயிலாக ஒளிபரப்ப கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது என ஆட்சியர் ச.விசாகன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
விளையாட்டு
5 hours ago
க்ரைம்
6 hours ago
உலகம்
7 hours ago
விளையாட்டு
7 hours ago
வேலை வாய்ப்பு
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
விளையாட்டு
8 hours ago
கல்வி
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago