மன்னார்குடியில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி நகை கொள்ளை :

By செய்திப்பிரிவு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மேல முதல் தெருவைச் சேர்ந்தவர் மாரியம்மாள்(60). கணவர் உயிரிழந்துவிட்ட நிலையில், வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், இவரது வீட்டுக்குள் நேற்று முன்தினம் இரவு புகுந்த ஒரு நபர், அரிவாளால் மாரியம்மாளை வெட்டிவிட்டு, அவர் அணிந்திருந்த மூன்றரை பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றார். காயமடைந்த மாரியம்மாள், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். தகவலறிந்த எஸ்.பி விஜயகுமார், மாரியம்மாளின் வீட்டுக்குச் சென்று பார்வையிட்டார். இதுகுறித்து மன்னார்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

13 mins ago

வாழ்வியல்

45 mins ago

உலகம்

43 mins ago

தமிழகம்

53 mins ago

இந்தியா

56 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்