கரூர்: தமிழகத்தில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அனைத்து ஊழியர்களும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள தலைமை தேர்தல் அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்.
இதையடுத்து, கரூர் மாவட்ட பள்ளி கல்வித் துறையில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களும் தேர்தல் பணியில் ஈடுபடும் பொருட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி அறிவுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் உயர், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு நேற்று முன்தினம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
இதையடுத்து, பழையஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் 10-க்கும் மேற்பட்டோர் சேங்கல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று கோவிஷீல்டு கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
15 mins ago
வாழ்வியல்
47 mins ago
உலகம்
45 mins ago
தமிழகம்
55 mins ago
இந்தியா
58 mins ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
ஓடிடி களம்
1 hour ago
க்ரைம்
2 hours ago
ஜோதிடம்
1 hour ago
தமிழகம்
1 hour ago