உடுமலையில் ஓய்வு பெற்ற ஆசிரியரின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ள புகுந்த மர்ம நபர்கள் ரூ.1.38 லட்சம் மதிப்புள்ள தங்க நகை மற்றும் ரொக்கம் ஆகியவற்றை திருடிச்சென்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘‘உடுமலை தண்டாயுதபாணி லே-அவுட்டில் வசிப்பவர் ராஜேந்திரன் (62). ஓய்வு பெற்றஆசிரியர். கடந்த சில தினங்களுக்கு முன் தனது குடும்பத்தினருடன், மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு ராஜேந்திரன் சென்றுள்ளார். நேற்று முன்தினம் இரவு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது 2 பீரோக்களும் உடைக்கப்பட்டு, ரூ.1.38 லட்சம் ரொக்கம் மற்றும் 12.5 சவரன் தங்க நகைகள் திருட்டுப்போனது தெரியவந்தது. தகவலறிந்து சென்ற போலீஸார், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
46 mins ago
ஜோதிடம்
58 mins ago
தொழில்நுட்பம்
6 hours ago
விளையாட்டு
7 hours ago
சினிமா
8 hours ago
தமிழகம்
8 hours ago
விளையாட்டு
11 hours ago
இந்தியா
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago