உடுமலையில் மர்மமான முறையில் ஆடுகள் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

திருப்பூர் மாவட்டம் உடுமலைமாரியம்மன் நகர் பகுதியைச் சேர்ந்த சிலர் ஆடுகள் வாங்காமலேயே அரசின் தொகையை பெற்று ஏமாற்றியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரித்து வரும் நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சிலரது ஆடுகள் திடீரென இறந்ததால் அதன் பயனாளிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து பயனாளிகள் கூறும்போது ‘‘இப்பகுதியில் கடந்த சில நாட்களில் மட்டும்சுமார் 20 ஆடுகள் உயிரிழந்துள்ளன. இதுகுறித்து அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து உரியநடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர். கால்நடைத் துறை உதவி இயக்குநர் ஜெயராமன் கூறும்போது, ‘‘பாதிக்கப்பட்ட பகுதியில் கால்நடைத் துறையினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். தொடர் மழை காரணமாகவும் ஆடுகள் உயிரிழக்க வாய்ப்புள்ளது. எனினும் ஆடுகளுக்கு காப்பீடு செய்துள்ள பயனாளிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும்’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 mins ago

வணிகம்

17 mins ago

இந்தியா

19 mins ago

சினிமா

25 mins ago

ஓடிடி களம்

57 mins ago

கல்வி

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

மேலும்