ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் திருட்டு

By செய்திப்பிரிவு

உடுமலை: உடுமலையில் ஓய்வு பெற்ற ஆசிரியரின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் ரூ.1.38 லட்சம் மதிப்புள்ள தங்க நகை மற்றும் ரொக்கம் ஆகியவற்றை திருடிச்சென்றனர்.இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘‘உடுமலை தண்டாயுதபாணி லே-அவுட்டில் வசிப்பவர் ராஜேந்திரன் (62). ஓய்வு பெற்றஆசிரியர். கடந்த சில தினங்களுக்கு முன் தனது குடும்பத்தினருடன், மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு ராஜேந்திரன் சென்றுள்ளார். நேற்று முன்தினம் இரவு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது 2 பீரோக்களும் உடைக்கப்பட்டு, ரூ.1.38 லட்சம் ரொக்கம் மற்றும் 12.5 சவரன் தங்க நகைகள் திருட்டுப்போனது தெரியவந்தது. தகவலறிந்து சென்ற போலீஸார், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

33 mins ago

தமிழகம்

23 mins ago

இந்தியா

41 mins ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

உலகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்