திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பகுதியில் தொடர் மழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
வத்தலகுண்டு பகுதியில் உள்ள விராலிப்பட்டி, மீனாங்கண்ணிப் பட்டி, பண்ணைப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் 150-க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.அறுவடைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், நெற்கதிர்கள் நீரில் மூழ்கியதால் செடியிலேயே அழுகி விட்டன. கடன் வாங்கி விவசாயம் செய்த விவசாயிகள், கடனை எவ்வாறு அடைப்பது என்ற கவலையில் உள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், இந்த ஆண்டு பயிரிடும்போது மழை பெய்ததால் அறுவடை வரை தண்ணீர் இருக்கும் என நினைத்து நெல் பயிரிட்டோம். ஆனால், கூடுதல் மழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
உலகம்
5 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
7 hours ago
சினிமா
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago