பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு மேற்கொள்ள அனுமதி மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை பொற்பனைக் கோட்டையில் அகழாய்வு மேற்கொள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்துக்கு 3 மாதங்களில் அனுமதி வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மேலபனையூரைச் சேர்ந்த கரு.ராஜேந்திரன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

புதுக்கோட்டை மாவட்டத்தில் 160-க்கும் மேற்பட்ட இடங்களில் 5 ஆயிரம் ஆண்டு பழமையான கல்வெட்டுகள் உள்ளன. மத்திய தொல்லியல் நினைவுச் சின்னங்கள் 420-ல் 109 நினைவுச் சின்னங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளன.

பொற்பனைக்கோட்டையில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோட்டை உள்ளது. இது சங்கக் காலத்தில் கற்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. 45 ஏக்கர் பரப்பளவில் உள்ள இக்கோட்டையை பாதுகாக் கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவிக்க மத்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிட வேண் டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு, நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கணபதி சுப்பிரமணியம் வாதிட்டார். அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு மேற்கொள்ள தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் முன்வந்துள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழகம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி அகழாய்வு நடத்த தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்துக்கு அனுமதி வழங்க மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரைத்துள்ளது என்றார்.

இதையடுத்து, பொற்பனைக் கோட் டையில் அகழாய்வு நடத்த அனுமதி கேட்டு தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் அனுப்பிய மனு மீது மார்ச் 31-க்குள் மத்திய அரசு முடிவு எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

சுற்றுலா

6 hours ago

மேலும்