பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு :

By செய்திப்பிரிவு

நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

தமிழக-கேரள எல்லைப் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. முல்லை பெரியாறு அணைப்பகுதியில் நேற்று மாலை 140 மி.மீ. மழையளவு பதிவானது. குமுளி, இடுக்கி, அடிமாலி உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் மழையால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் நீர்வரத்து 1,438 கன அடியாக இருந்தது. நேற்று மாலை 6,083 கன அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து 1,300 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

பெரியாறு அணையில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் 128.80 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 129.60 அடியாக உயர்ந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

விளையாட்டு

11 hours ago

சினிமா

12 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்