உர தட்டுப்பாட்டை கண்டித்து விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் :

By செய்திப்பிரிவு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் உர தட்டுப்பாட்டை கண்டித்து ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாய சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் ஆர்.ராஜா சிதம்பரம் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகி என்.செல்லதுரை, தி.க.நங்கராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் தனியார் உர விற்பனை நிலையங்களில் யூரியா உள்ளிட்ட உரங்களை பதுக்கிவைத்து, அதிக விலைக்கு விற்பனை செய்யும் உர நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசின் வேளாண் கடன் தள்ளுபடி அறிவிப்பை ஏற்று, இதர மாவட்டங்களில் வழங்கியதுபோல விவசாயக் கடன், நகைக்கடன் தள்ளுபடி சான்றுகளை உடனடியாக விவசாயிகளிடம் வழங்க வேண்டும். உடனடியாக பயிர்க்கடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. முடிவில், ஆட்சியரிடம் விவசாய சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனுவை அளித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

விளையாட்டு

11 hours ago

சினிமா

12 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்