ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து :

By செய்திப்பிரிவு

தமிழகத்தின் புதிய ஆளுநராக பொறுப்பேற்றுள்ள ஆர்.என்.ரவிக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதிய ஆளுநருக்கு அனுப்பியுள்ள வாழ்த்துக் கடிதத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பதாவது:

தமிழக ஆளுநராக பொறுப்பேற்கும் தங்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தங்களது நிறைந்தஅறிவும், வளமான அனுபவமும், மாநில ஆளுநர் மற்றும், உளவு அமைப்புகளின் தலைமைப் பொறுப்புகளில் தங்களது பணியும், தமிழக ஆளுநராக பணி என்ற இந்த புதிய பொறுப்புக்கு மிகுந்த உறுதுணையாக இருக்கும். அத்துடன், தமிழகமும் சிறந்த முன்னேற்றத்தை அடையும்.

தங்களது பதவியேற்பு விழாவுக்கு வர முடியாததற்கு எனது மன்னிப்பை கோருகிறேன். எனதுமனைவியின் மரணம் காரணமாக கடந்த 2 வாரங்களாக சொந்த மாவட்டமான தேனியில் உள்ளேன்.இறப்பு தொடர்பான சடங்குகளுக்காக நான் இங்கு இருக்க வேண்டியுள்ளது. இன்னும் சில தினங்களில் நான் சென்னை வந்ததும், உங்களது விருப்பமான நேரத்தில் சந்திக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

இந்தியா

10 mins ago

இந்தியா

17 mins ago

தமிழகம்

10 mins ago

இந்தியா

28 mins ago

க்ரைம்

45 mins ago

இந்தியா

55 mins ago

விளையாட்டு

44 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

மேலும்