திருச்சி: திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகேயுள்ள ஆர்.கோம்பை வடக்கு போயர் தெருவைச் சேர்ந்தவர் பெரியசாமி(32). இவரது மனைவி புஷ்பவள்ளி (எ) லட்சுமி(24). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். குடும்ப பிரச்சினைகள் காரணமாக கடந்த சில தினங்களாக கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
நேற்று முன்தினம் பூட்டிய வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து உப்பிலியபுரம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸார் அங்குசென்று பார்த்தபோது, புஷ்பவள்ளி கொலை செய்யப்பட்டு கிடந்தார். தலையில் காயங்களுடன் அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. அவரது குழந்தைகள் பெரியசாமியின் பெற்றோர் வீட்டில் இருந்தன. பெரியசாமியைக் காணவில்லை. அதைத்தொடர்ந்து நடத்திய விசாரணையில், குடும்ப பிரச்சினை காரணமாக பெரியசாமி தனது மனைவியை கொலை செய்துவிட்டு தலைமறைவாகி விட்டது தெரியவந்தது. இதுகுறித்து உப்பிலியபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து பெரியசாமியைத் தேடி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
விளையாட்டு
3 hours ago
க்ரைம்
3 hours ago
உலகம்
4 hours ago
விளையாட்டு
4 hours ago
வேலை வாய்ப்பு
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
விளையாட்டு
6 hours ago
கல்வி
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago