வைகுண்டம் வட்டம் வெள்ளூர்ஆதிச்சநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் கடந்த28-ம் தேதி பணியில் இருந்தபோது சிலரால் தாக்கப்பட்டார். வைகுண்டம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை. இதைக் கண்டித்தும், அரசு நிலங்களை பாதுகாக்கும் பொறுப்பில் உள்ள தங்களுக்கு பணி பாதுகாப்பற்ற சூழ்நிலை உருவாகி உள்ளதாக கூறியும் கிராம நிர்வாக அலுவலர்கள் பணியை புறக்கணித்து கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம நிர்வாகஅலுவலர் வட்ட தலைவர் ஆர்.ஆதிலட்சுமி தலைமை வகித்தார். இதேபோல கயத்தாறு, எட்டயபுரம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
உலகம்
5 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
7 hours ago
சினிமா
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago