கரூர் கரூர் மாவட்டம் காவல்காரன்பட்டி துணை மின் நிலையத்தில் இன்று (ஜூலை 13) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன

By செய்திப்பிரிவு

கரூர்

கரூர் மாவட்டம் காவல்காரன்பட்டி துணை மின் நிலையத்தில் இன்று (ஜூலை 13) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால், இத்துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பொம்மநாயக்கன்பட்டி, ராஜன் காலனி, காவல்காரன்பட்டி, கீழவெளியூர், கல்லடை, மேலவெளியூர், ராச்சாண்டார் திருமலை, புழுதேரி, இடையப்பட்டி, பில்லூர், சின்னபனையூர், பாதிரிப்பட்டி ஆகிய பகுதிகளில் இன்று காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூர் துணை மின் நிலையத்தில் நாளை (ஜூலை 14) மற்றும் நாளை மறுநாள் (ஜூலை 15) மழைநீர் வடிகால் கால்வாய் கட்டும் பணிக்கு இடையூறாக உள்ள மின் கம்பங்களை மாற்றி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால், கோபாலபுரம், வடக்கு பிரதட்சணம் சாலை, கரூர் கோட்டாட்சியர் அலுவலகம், எல்ஐசி அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கண்ட தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

14 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

2 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்