தாராசுரம் வீரபத்ர சுவாமி கோயிலில் ராஜகோபுரம் கட்ட பாலாலயம் :

By செய்திப்பிரிவு

கும்பகோணம்: கும்பகோணம் வீரசைவ பெரிய மடத்துக்கு சொந்தமான தாராசுரம் வீரபத்ர சுவாமி கோயில் பஞ்ச குரோச தலம் என்ற சிறப்பு பெற்றுள்ளது. பத்ர காளியம்மன் சமேத வீரபத்திர சுவாமி பரிவார சன்னதிகளுடன் அருள்பாலிக்கிறார்.

மேலும், இத்தலம் பித்ருதோஷ பரிகார தலமாகவும், ஒட்டக்கூத்தர் ஜீவசமாதி, ரெவண சித்தர் ஜீவசமாதி அமைந்த தலமாகவும் போற்றப்படுகிறது.

இக்கோயிலின் பிரதான ராஜ கோபுரம் பல ஆண்டுகளாக திருப்பணி செய்யாமல் சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால், புதிதாக ராஜகோபுரம் கட்ட திருப்பணி மேற்கொள்வது என கவிச் சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் ஆன்மிக கல்வி அறக்கட்டளை முடிவெடுத்தது. அதன்படி, ராஜகோபுர திருப்பணி குழுவினர், பக்தர்கள் பாலாலய பூஜை விழாவை, நேற்று முன்தினம் விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி, யாகசாலை பிரவேசம் செய்து சிறப்பு ஹோமங்கள் நடத்தினர். இதையடுத்து நேற்று மூலமந்திர ஹோமம், அஸ்த்தர ஹோமம், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று பாலாலயம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பக்தர்கள் தனிமனித இடைவெளியுடன் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

இந்தியா

45 mins ago

கருத்துப் பேழை

29 mins ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

6 hours ago

தமிழகம்

6 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்