அமைச்சராக பதவியேற்ற பிறகு -

By செய்திப்பிரிவு

அமைச்சராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக ராணிப்பேட்டை தொகுதிக்கு வந்த ஆர்.காந்திக்கு அரசு அதிகாரிகள் மற்றும் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட ஆர்.காந்தி கைத்தறிமற்றும் துணிநூல் துறை அமைச்சராக கடந்த 7-ம் தேதி காலை பதவியேற்றார். அதன் பிறகு சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டா லின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம், அரசு அலுவல்களில் தீவிரமாக ஈடுபட்டு வந்த அமைச்சர் ஆர்.காந்தி நேற்று மாலை ராணிப்பேட்டை தொகுதிக்கு வந்தார். அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக தொகுதிக்கு வந்ததை தொடர்ந்து மாவட்ட திமுக சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, வேலூர் சரக டிஐஜி காமினி, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், ராணிப்பேட்டை எஸ்பி சிவக்குமார், ராணிப்பேட்டை துணை காவல் கண்காணிப்பாளர் பூரணி மற்றும் அரசு அதிகாரிகள் அமைச்சர் ஆர்.காந்திக்கு பூங் கொத்து கொடுத்து வரவேற்றனர்.

இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (திங்கள்கிழமை) காலை 10 மணிக்கு கரோனா தடுப்பு நடவ டிக்கைகள் குறித்து அமைச்சர் ஆர்.காந்தி தலைமையில்ஆலோசனைக்கூட்டம் நடைபெற உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

க்ரைம்

6 hours ago

உலகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

வேலை வாய்ப்பு

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

கல்வி

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்