ராயக்கோட்டை அருகே ஐந்தரை டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸார் 2 பேரை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார், ராயக்கோட்டை அம்மா பூங்கா அருகே நேற்று முன்தினம் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், ஐந்தரை டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து லாரியில் வந்த ராயக்கோட்டை சூளகிரி சாலையை சேர்ந்த சத்யராஜ் (28), தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஆகியோரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அதில், ராயக்கோட்டை பகுதியில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்திச் செல்வது தெரிந்தது. இதனை தொடர்ந்து சத்யராஜ், 16 வயது சிறுவன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். மேலும், ஐந்தரை டன் ரேஷன் அரிசி மற்றும் லாரியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
முக்கிய செய்திகள்
இணைப்பிதழ்கள்
5 hours ago
இணைப்பிதழ்கள்
5 hours ago
இணைப்பிதழ்கள்
5 hours ago
இணைப்பிதழ்கள்
5 hours ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
சுற்றுச்சூழல்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
1 hour ago