தருமபுரி மாவட்டம் அரூர் அருகே பெண்ணை துப்பாக்கியால் சுட்டவர் கைது செய்யப்பட்டார்.
அரூர் வட்டம் சித்தேரி ஊராட்சி அரசநத்தம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வடிவேல் (62). இவரது சகோதரரின் மனைவி சரோஜா (60). இவ்விரு குடும்பத்தினருக்கும் இடையே நில விவகாரம் தொடர்பாக முன் தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த மாதம் 26-ம் தேதி விவசாய கிணற்றில் இருந்து நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, வடிவேல் தன்னிடம் இருந்த, உரிமம் பெறாத நாட்டுத் துப்பாக்கி மூலம் சரோஜாவை சுட்டார். இதில், கால் பகுதியில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து சரோஜாவுக்கு காயம் ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக சரோஜா அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய அரூர் போலீஸார், தலைமறைவாக இருந்த விவசாயி வடிவேலுவை தேடி வந்தனர். வனப்பகுதியில் அவர்பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் நேற்று வடிவேலுவை கைது செய்த போலீஸார் அவரிடம் இருந்து, உரிமம் பெறாத நாட்டுத் துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
47 mins ago
ஜோதிடம்
1 hour ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
7 hours ago
தமிழகம்
7 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
8 hours ago
விளையாட்டு
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
உலகம்
10 hours ago
ஆன்மிகம்
10 hours ago