ஓசூர் நகரில் தொமுச, ஐஎன்டியுசி மற்றும் மின்சார வாரிய தொழிலாளர், பொறியாளர் ஐக்கிய சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் மே தின விழா கொண்டாடப்பட்டது.
ஓசூரில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் மேற்கு மாவட்ட தொமுச சார்பில் மே தின விழா கொண்டாடப்பட்டது. ஓசூர் திமுக எம்எல்ஏ சத்யா தலைமை தாங்கினார். தளி எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் திமுக கொடி ஏற்றி வைத்து மே தின உரையாற்றினார். பின்பு தொழிலாளர்களுக்கு முகக்கவசம், சானிடைசர், கபசுரக்குடிநீர் ஆகியவற்றை வழங்கினார்.
இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன், தொமுச மாவட்ட வட்ட நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். அதேபோல ஐஎன்டியுசி மற்றும் தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம் சார்பிலும் மே தின விழா கொண்டாடப்பட்டது.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
35 mins ago
இந்தியா
55 mins ago
தமிழகம்
1 hour ago
உலகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
சுற்றுச்சூழல்
2 hours ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago
தமிழகம்
2 hours ago
க்ரைம்
2 hours ago
தமிழகம்
3 hours ago