அரசு பள்ளியில் 7 கணினிகள் திருட்டு :

By செய்திப்பிரிவு

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட் டியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 412 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். 27 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு உள்ள கணினி ஆய்வகத்தில் கடந்த 22-ம் தேதி செய்முறை தேர்வு நடந்தது. வழக்கம் போல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து விட்டு சென்றனர். நேற்று பள்ளிக்கு வந்த கணினி ஆசிரியர் பார்த்திபன், கணினி ஆய்வகத்திற்கு சென்றார். அங்கு ஆய்வக கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது, 7 கணினிகள் திருடு போனது தெரிந்தது.

மேலும், கணினியை திருடவந்தவர்கள் மிளகாய் பொடி தூவியும், தண்ணீர் கொண்டு சுத்தம் செய்துவிட்டு சென்றுள்ளனர். இதுதொடர்பாக பள்ளியின் தலைமையாசிரியர் அப்துல்அஜில் அளித்த புகாரின் பேரில், பாப்பிரெட்டிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

19 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்