கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங் கரை வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. சிங்காரப்பேட்டை பகுதி செயலாளர் வேலு தலைமை வகித்தார். ஊத்தங்கரை பகுதி செயலாளர் வரதராஜன், தலைவர் தருமன், நிர்வாகிகள் சுப்பிரமணி, சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நடந்து முடிந்த சட்டப் பேரவை தேர்தல் அன்று வாக்களித்த அனைத்து 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களுக்கும் முழு சம்பளம் வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் சுழற்சி முறையை கைவிட்டு, தினமும் வேலையும், சட்டக்கூலி ரூ.273 வழங்க வேண்டும். கரோனா நிவாரண நிதியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ.7 ஆயிரத்து 500 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பினர். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
3 mins ago
இந்தியா
24 mins ago
தமிழகம்
39 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
வணிகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago