காரைக்காலில் புதிதாக 174 பேருக்கு கரோனா தொற்று; ஒருவர் உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் நேற்று பெறப்பட்ட பரிசோதனை முடிவுகளில், அதிகபட்சமாக 174 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 6,764 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,698 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது, 63 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 901 பேர் வீட்டுத் தனிமையில் உள்ளனர்.

காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் கரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒருவர் நேற்று உயிரிழந்தார். மாவட்டத்தில் இதுவரை வெளிமாநிலத்தைச் சேர்ந்த 7 பேர் உட்பட கரோனா தொற்றுடன் 109 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை 20,044 பேர் முதல் தவணையும், 2,059 பேர் 2-வது தவணையும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

23 mins ago

வணிகம்

38 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்