மதுரை விமான நிலையத்தில் 15 தொழில்நுட்ப ஊழியர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால் விமானம் நிலையம் செயல்படும் நேரம் இன்று (ஏப்.30) முதல் குறைக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 12 மணி முதல் இரவு 10.30 மணி வரை மட்டுமே செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா இரண்டாவது அலை பரவலை முன்னிட்டு பிறப்பிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் மதுரை விமான நிலையத்துக்கு சில வாரங்களாக பயணிகள் வருகை குறைந்தது. இதனால் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. தற்போது 9 விமானங்கள் மட்டுமே மதுரையில் இருந்து மற்ற நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன.
இந்நிலையில் கடந்த 5 நாட்களில் விமானநிலைய தொழில்நுட்பப் பிரிவு ஊழியர்கள் 15 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதனால், தற்போதுள்ள ஊழியர்களைக் கொண்டு இரண்டு ‘ஷிப்ட்’களில் விமானங்களை இயக்க முடியாது. வழக்கமாக விமான நிலையத்தில் காலை 6 மணி முதல் இரவு 10.30 மணி வரை விமானங்கள் இயக்கப்படும். தற்போது ஊழியர்களுக்கு கரோனா வந்ததால் இன்று முதல் விமான நிலையம் பிற்பகல் 12 மணி முதல் 10.30 மணி வரை மட்டுமே ஒரே ‘ஷிப்ட்’டாக செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்துக்குள் எத்தனை விமானங்களை இயக்க முடியுமா, அவற்றை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
சினிமா
5 hours ago
விளையாட்டு
6 hours ago
வணிகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
விளையாட்டு
7 hours ago
க்ரைம்
7 hours ago
சுற்றுச்சூழல்
8 hours ago
க்ரைம்
8 hours ago
இந்தியா
8 hours ago
சினிமா
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago