தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே வீட்டில் தொழிலாளி மர்மமாக உயிரிழந்தது தொடர்பாக போலீஸார் விசாரிக்கின்றனர்.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பூனையானூர் கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி பாஸ்கரன் (55). இவரது மனைவி பழனியம்மாள் (48). இந்த தம்பதிக்கு 2 மகள் மற்றும் 1 மகன் உள்ளனர். பழனியம்மாள் தன் குழந்தைகளுடன் கோவையில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். பாஸ்கரன் பூனையானூரில் உள்ள வீட்டில் தங்கியிருந்து உள்ளூரில் வேலைக்கு சென்று வந்தார்.
இந்நிலையில், அவர் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். பாப்பிரெட்டிப்பட்டி போலீஸார் கதவை உடைத்து சோதனையிட்டனர். அதில், வீட்டினுள் பாஸ்கரனின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது தெரிய வந்தது. பாஸ்கரன் வீட்டினுள் மர்மமாக உயிரிழந்து கிடந்த நிலையில் அவரது உயிரிழப்பின் பின்னணி குறித்து போலீஸார் விசாரணை நடத்துகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
18 mins ago
தமிழகம்
21 mins ago
சினிமா
28 mins ago
விளையாட்டு
51 mins ago
வணிகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
1 hour ago
ஓடிடி களம்
1 hour ago
கல்வி
1 hour ago
சினிமா
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago