தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் ஓய்வூதியதாரர்கள் குறைதீர் கூட்டம் இணையவழியில் வரும் 12-ம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து வருங்கால வைப்பு நிதி மண்டல ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:
கோவையில் டாக்டர் பாலசுந்தரம் சாலையில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில், ஏப்ரல் மாதத்துக்கான ஓய்வூதியதாரர்கள் குறைதீர் கூட்டம் இணையவழியில் வரும் 12-ம் தேதி மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் தலைமையில் நடைபெறவுள்ளது.
அன்றைய தினம் காலை 11 மணி முதல் பகல் 12 மணி வரை சந்தாதாரர்கள், பகல் 12 முதல் 1 மணி வரை தொழிலதிபர்கள் (விலக்கு அளிக்கப்படாத மற்றும் விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்கள்), பிற்பகல் 2.30 முதல் 3.30 மணி வரை ஓய்வூதியதாரர்கள் என்ற அடிப்படையில் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதில் பங்கேற்க விரும்புவோர் தங்களது குறைகள் குறித்த விவரங்களுடன் பெயர், தொழில் மையம், நிறுவன முகவரி, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி எண், யுஏஎன் எண், ஓய்வூதிய நியமன ஆணை எண், தொலைபேசி மற்றும் அலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரி (கட்டாயம்) ஆகிய விவரங்களுடன் ஏப்ரல் 9-ம் தேதிக்கு முன்னதாக, அலுவலகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரிக்கு தெரியப்படுத்த வேண்டும்.
இணையவழியில் கூட்டத்தில் பங்கேற்பதற்கான இணைப்பு மின்னஞ்சல் மூலமாக அளிக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
வணிகம்
10 mins ago
தமிழகம்
4 mins ago
தமிழகம்
29 mins ago
தமிழகம்
40 mins ago
இந்தியா
34 mins ago
தமிழகம்
51 mins ago
வாழ்வியல்
42 mins ago
இந்தியா
56 mins ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago