மருத்துவமனை, வர்த்தக நிறுவனக் கட்டிடங்களில் - தீ விபத்துகளை தடுக்க பயிற்சி : தீயணைப்புத் துறை நடவடிக்கை

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை சார்பில், மருத்துவ மனைகள், வர்த்தக நிறுவனங்களில் ஏற்படும் தீ விபத்துகளைத் தடுப்பது குறித்த கலந்தாய்வுக் கூட்டம் மதுரையில் நடந்தது. மாவட்ட அலுவலர் வினோத், தனியார் மருத்துவமனை, ஹோட் டல், வர்த்தக நிறுவனங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், ஊழியர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்துக்கு தீயணைப்புத் துறை தென் மண்டல துணை இயக்குநர் விஜயகுமார் தலைமை வகித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சமீபத்தில் மும்பையில் உள்ள மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர். பெரும்பாலும் மின்கசிவு காரணமாகவே இது போன்ற தீ விபத்துகள் ஏற்படுகின்றன.

இதுபோன்றநிலை மதுரையில் உள்ள மருத்துவமனைகளில் ஏற்படாமல் முன்னெச்சரிக்கை யாக நடவடிக்கை எடுத்து வரு கிறோம்.

மதுரை மாவட்டத்தில் மருத்துவமனைகள், வர்த்தக நிறுவனங்களின் ஊழியர்களுக்கு 6 மாதங்களுக்கு ஒரு முறை தீ தடுப்புப் பயிற்சி அளிக்கப்படும் என்று கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 min ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்