அதிமுக பிரமுகர் வீட்டில் ரூ. 1.70 லட்சம் பறிமுதல் :

By செய்திப்பிரிவு

பொள்ளாச்சி-பாலக்காடு சாலையில் உள்ள அதிமுக பிரமுகரின்வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து பொள்ளாச்சி-பாலக்காடு சாலையில், மாரியப்பன் வீதியில் வசித்துவரும் அதிமுக முன்னாள் கவுன்சிலர் முருகன் என்பவரது வீட்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில்ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்து 600 மற்றும் ஒரு செல்போன், வாக்காளர்களின் பெயர்கள் அடங்கிய ஆவணம்ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர். புகாரின் பேரில் மேற்கு காவல்நிலைய போலீஸார் விசாரிக்கின்றனர்.

திமுக அலுவலகத்தில் சோதனை

கோவை வடக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்டபி.என்.புதூரில் உள்ள திமுக அலுவலகத்தில், வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக, தேர்தல் பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வடக்கு சட்டப்பேரவைத் தொகுதியின் பொதுப் பார்வையாளர் சவுரப் பகத், தேர்தல் செலவினப் பார்வையாளர் விஜய்குமார் ஆகியோர் தலைமையிலான பறக்கும்படை அதிகாரிகள், திமுக அலுவலகத்தில் நேற்று சோதனை நடத்தினர். அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.5.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சாயிபாபாகாலனி போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

விளையாட்டு

5 hours ago

க்ரைம்

6 hours ago

உலகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

வேலை வாய்ப்பு

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

கல்வி

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்