விழுப்புரம் அருகே வாக்காளர் பட்டியலுடன் பணம் பறிமுதல் :

By செய்திப்பிரிவு

விழுப்புரம் அருகே வாக்காளர் பட்டியலுடன் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

நாளை சட்டபேரவைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் வாக்காளர் களுக்கு பணம் கொடுக்கிறார்களா என விழுப்புரம் ஆட்சியர் அண்ணாதுரை, கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயாபி சிங் ஆகியோர் தனித்தனியே ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

விழுப்புரம் வண்டிமேடு பகுதியில் வாக்காளர்களுக்கு தகவல் சீட்டை தனி நபர் ஒருவர் வழங்குகிறார் என்ற தகவல் கிடைத்தது. கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங்தலைமையிலான குழுவினர் அங்குசென்று ஆய்வு மேற்கொண்டனர். அந்த தனி நபர்மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தர விட்டார்.

மேலும் வி. மருதூர் பகுதியில்பைக்கில் சென்ற ஒருவர் கூடுதல் ஆட்சியரின் வாகனத்தை பார்த்தவுடன் பைக்கை நிறுத்தி விட்டு தப்பி சென்றார். சிறிது நேரத்தில் வேறு ஒருவர் பைக் எடுக்க வந்தபோது, அவரை பிடித்து, பைக்கில் பொருத்தப்பட்ட பெட்டியை திறந்து பார்த்தனர். அதில் ரூ. 3 ஆயிரம் பணம், வாக் காளர்கள் பட்டியலும் இருப்பது தெரியவந்தது. இதனோடு பைக் கையும் பறிமுதல் செய்து போலீ ஸாரிடம் ஒப்படைத்தனர்.

ரூ. 3 ஆயிரம் பணம், வாக்காளர்கள் பட்டியலும் இருப்பது தெரியவந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 mins ago

தமிழகம்

50 mins ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

6 hours ago

வணிகம்

13 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

மேலும்