தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தொகுதியைச் சேர்ந்த கூடலூர் அருகே உள்ள குள்ளப்பகவுண்டன்பட்டி கிராமத்தில் பிள்ளையார் கோயில் பகுதியில் வாக்காளர்களுக்கு சிலர் பணப்பட்டுவாடா செய்வதாக தேர்தல் அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. பறக்கும் படை தேர்தல் அதிகாரி பிரேம்தாஸ்குமார் தலைமையிலான குழுவினர் அப்பகுதிக்குச் சென்றனர்.
அங்கு திமுகவைச் சேர்ந்த சிலர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருந்தனர். அதிகாரிகளைப் பார்த்ததும் கவரை குப்பையில் தூக்கிப் போட்டுவிட்டு ஓடினர். பறக்கும் படையினர் இவற்றை எண்ணிப் பார்த்ததில் ரூ.8 லட்சத்து 71 ஆயிரத்து 500 இருப்பது தெரிய வந்தது. உத்தமபாளையம் காவல் துணை கண்காணிப்பாளர் சின்னக் கண்ணு விசாரணை நடத்தினார்.கூடலூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
42 mins ago
வலைஞர் பக்கம்
45 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
51 mins ago
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
ஓடிடி களம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago