மத்திய பாஜக அரசை கண்டித்து புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணிக் கட்சியினர் இன்று அறப்போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ஜனநாயக முறை யில் தேர்தலில் நின்று வெற்றிபெற்று நான்கரை ஆண்டுகள் மக்களாட்சி நடத்தியுள்ள காங்கிரஸ் ஆட்சியை, மூன்று நியமன சட்டப்பேரவை உறுப்பினர்களை கொண்டும், சில சட்டப்பேரவை உறுப்பினர்களை பணத்தாசை காட்டியும், சிபிஐ, வருமான வரிதுறை, அமலாக்கப்பிரிவு ஆகியவைகளைக் கொண்டு மிரட்டியும் ஆட்சியை கலைத்துள்ளது.
தொடர்ந்து இந்தியாவில் ஜனநாயக படுகொலையை நிகழ்த்தி வரும், மத்தியில் ஆளும் பாஜக அரசை கண்டித்து, கண்டன அறப்போராட்டத்தை நடத்த இருக்கிறோம்.
புதுச்சேரி அண்ணா சதுக்கம் அருகே இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் இந்த அறப்போராட்டத்தில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முன் னாள் அமைச்சர்கள், மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் மற்றும் எம்எல்ஏக்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்கின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
6 mins ago
க்ரைம்
50 mins ago
தமிழகம்
40 mins ago
இந்தியா
58 mins ago
வாழ்வியல்
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
உலகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
3 hours ago
சுற்றுச்சூழல்
3 hours ago
தமிழகம்
3 hours ago