திருஉத்தரகோசமங்கையில் கோயில் முன் தவக்கோலத்தில் இறைவனடி சேர்ந்த சிவனடியார்

By செய்திப்பிரிவு

திருஉத்தரகோசமங்கை வராஹி அம்மன் கோயிலில் சிவனடியார் ஒருவர் தவக்கோலத்தில் இறைவனடி சேர்ந்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கையில் பிரசித்தி பெற்ற வராஹி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து வந்த சுமார் 65 வயது மதிக்கத்தக்க சிவனடியார் ஒருவர் அம்மனை தினமும் வணங்கியபடி அங்கு தங்கி இருந்தார். சிவனடியார் கோலத்தில் இருந்த அவர் யாரிடமும் பேசுவதில்லை. பெரும்பாலான நேரங்களில் அவர் தியானம் செய்வதி லேயே இருந்துள்ளார். அவரை வணங்கிச் செல்லும் பக்தர்கள் தங்களுக்கு நிம்மதி கிடைத்ததாகக் கூறுகின்றனர். இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை மாலை முதல் அவர் கோயில் முன்பு தியான நிலையில்

தவக்கோலத்தில் அமர்ந்திருந்தார். நேற்று காலை வரை அவரது தவக்கோலத்தில் மாற்றமில்லாததால், அங்கிருந்த மக்கள் சந்தேகம் அடைந்து திருஉத்தரகோசமங்கை போலீஸாருக்கு தகவல் அளித்தனர். போலீஸார் வந்து பார்த்தபோது அவர் தவக்கோலத்திலேயே இறைவனடி சேர்ந்தது தெரியவந்தது. அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

1 hour ago

உலகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

வேலை வாய்ப்பு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

கல்வி

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

மேலும்