புதுச்சேரி ஐஆர்பிஎன் காவலர்களுக்கு ஐஎன்ஏ குழு சிறப்பு பயிற்சி

By செய்திப்பிரிவு

புதுச்சேரி ஐஆர்பிஎன் காவலர்க ளுக்கு ஐஎன்ஏ குழுவினர் சிறப்பு பயிற்சி அளித்தனர்.

நாடு முழுவதும் மாநிலங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினால் அதை எப்படி சமாளிப்பது என்பது குறித்து தேசிய புல னாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சிறப்பு பயிற்சி அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை வண்டலூரில் உள்ள என்ஐஏ தென்மண்டல அலுவலகத்தில் இருந்து தேசிய பாதுகாப்பு படையில் இடம்பெற்றுள்ள மேஜர் ராஜேஷ் தாக்கூர் தலைமையிலான அதிகாரிகள் குழு நேற்று முன் தினம் புதுச்சேரிக்கு வந்து சட்டப் பேரவை வளாகத்தில் ஆய்வு மேற்கெண்டனர். அப்போது சட்டப் பேரவை காவலர்களுக்கு பாது காப்பு நடவடிக்கைகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வங்கினர்.

புதுச்சேரிக்குள் வருகிற 23-ம்தேதி மாலை 5 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரை எந்தநேரத்திலும் தீவிரவாதிகள் ஊடுருவுவதுபோல் ஒத்திகை நடத் தப்பட உள்ளது.

இதை முறியடிக்கும் வகையில் புதுச்சேரி ஐஆர்பிஎன் போலீஸாருக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. சட்டப்பேரவை, ஆளுநர் மாளிகை, தலைமை செயலகம் போன்ற பகுதிகளில் எவ்வாறு பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்? எந்தெந்த வகையில் ஊடுருவல் நடைபெற வாய்ப்புள்ளது? என்பதை விளக்கி அவர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

இதற்காக ஐஆர்பிஎன் உதவி ஆணையர் செந்தில்முருகன் தலைமையில் 25-க்கும் மேற்பட்ட ஐஆர்பிஎன் காவலர்கள் சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள முதல்வர், சபாநாயகர் அலுவலகங்கள் மற்றும் பிற கட்டிடங்களை நேரில் சென்றுஆய்வு செய்தனர். இதேபோல் ஆளுநர் மாளிகை, தலைமை செயலகம் உள்ளிட்ட இடங்களையும் அவர்கள் பார்வையிட்டு பயிற்சி பெற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

2 mins ago

இந்தியா

4 mins ago

சினிமா

10 mins ago

ஓடிடி களம்

42 mins ago

கல்வி

56 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்