சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தைமுன்னிட்டு செங்கல்பட்டில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் 61.60 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் பங்கேற்று 59 மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், மின்கலனால் இயக்கப்படும் சக்கர நாற்காலி, பிரெய்லி ரீடர் என ரூ.61 லட்சத்து 60 ஆயிரத்து 854 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மேலும், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் அமைப்பு சாரா தொழிலாளர்களான கல்வி, திருமணம், இயற்கை மரணம் மற்றும் விபத்து மரணம் ஈமச்சடங்கு மற்றும் ஓய்வூதியம் உட்பட ரூ.60 லட்சத்து 29 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன.
இதில், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஜெ.செந்தில்குமாரி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் சோழிங்கநல்லூர் அரவிந்த் ரமேஷ், திருப்போரூர் எஸ்.எஸ்.பாலாஜி, செங்கல்பட்டு வரலட்சுமி, பாராளுமன்ற உறுப்பினர் க.செல்வம், மாவட்ட ஊராட்சி பெருந்தலைவர் செம்பருத்தி, அரசு அலுவலர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
18 mins ago
தமிழகம்
8 mins ago
சினிமா
16 mins ago
தமிழகம்
38 mins ago
க்ரைம்
54 mins ago
தமிழகம்
58 mins ago
இந்தியா
39 mins ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
க்ரைம்
2 hours ago
தமிழகம்
1 hour ago