விழுப்புரம் அருகே - தனியார் பேருந்து மோதி ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு : பேருந்துக்கு தீ வைப்பு

By செய்திப்பிரிவு

விழுப்புரம் பாணாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் அர்ஜூனன் (30). ஆட்டோ ஓட்டுநரான இவர் நேற்று இரவு பணிமுடிந்து வீட்டுக்கு சென்று கொண்டி ருந்தார்.

பாணாம்பட்டு கூட்டுச்சாலையில் புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் நோக்கி வந்த தனியார் பேருந்து ஆட்டோ மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அர்ஜீனன் உயிரிழந்தார். இத்தகவல் அறிந்த அர்ஜூனன் உறவினர்கள் பேருந்தை அடித்து நொறுக்கி தீ வைத்தனர். இத்தகவல் அறிந்த விழுப்புரம் நகர போலீஸார் நேரில் சென்று தீயை அணைத்தனர். பின்னர் அர்ஜூனனின்உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

தமிழகம்

15 mins ago

தமிழகம்

36 mins ago

இந்தியா

45 mins ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

மேலும்