தாம்பரம் அருகே சேலையூரில் ஒரே வளாகத்தில், மாடம்பாக்கம் உதவி மின் பொறியாளர் அலுவலகம் மற்றும் சேலையூர் மின் செயற்பொறியாளர் அலுவலகம் ரூ.20 லட்சத்தில் ஆகியவை கட்டப்பட்டிருந்தன. இந்தகட்டிடங்களை தாம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தாம்பரம்கோட்ட செயற்பொறியாளர் பாரிராஜன், உதவி செயற்பொறியா ளர்கள் முருகன் (கட்டுமானம்) சேலையூர் சிவராமன், உதவி மின்பொறியாளர்கள் சேலையூர் -ஆறுமுகம், மாடம்பாக்கம் வஜ்ரவேல், நேரு நகர் - ஜேக்கப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதுகுறித்து மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: பொதுமக்கள் வசதிக்காக மாடம்பாக்கம் உதவிமின் பொறியாளர் அலுவலகம்,சேலையூர் மின் செயற்பொறியாளர் அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே சேலையூரில் மின் செயற்பொறியாளர் அலுவலகம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது.
தற்போது இந்த புதிய கட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்பட்டுஉள்ளது. மேலும் சேலையூர் மின் உதவி பொறியாளர் அலுவலகம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. அதற்கு சொந்தகட்டிடம் கட்ட சேலையூரில் அரசுநிலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாரியத்துக்கு இடம் வழங்கும் பட்சத்தில் அங்கு புதிய கட்டிடம் கட்டப்படும்.
மேலும் பொதுமக்கள் புதிய மின்இணைப்பு தொடர்பான தகவல்கள், மின் அழுத்த ஏற்ற, இறக்கம், உடைந்த மின் கம்பங்கள், தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகள், பழுதடைந்த மின் பெட்டிகள், ஆபத்தான நிலையில் உள்ள மின் மாற்றிகள், மின் தடை குறித்த தகவல், குறைந்த மற்றும் உயர் மின் அழுத்தம் போன்ற மின் துறை சார்ந்த தொடர்பான புகார்களை 94987-94987 என்ற செல்போன் எண்ணில் தெரிவிக்கலாம் என்றார்.
முக்கிய செய்திகள்
உலகம்
3 mins ago
சினிமா
54 mins ago
வலைஞர் பக்கம்
57 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
ஓடிடி களம்
2 hours ago