முதல்வர் ரங்கசாமிக்கு 2-வது தவணை தடுப்பூசி :

By செய்திப்பிரிவு

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கடந்த மே மாதம் 9-ம் தேதி கரோனாவால் பாதிக்கப்பட்டு, சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டார். சிகிச்சை முடிந்து மே மாதம் 17-ம் தேதி வீடு திரும்பினார். சிகிச்சை முடிந்து 3 மாதங்களுக்குப் பிறகு கோவி ஷீல்ட் கரோனா தடுப்பூசி முதல் தவணையை கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி செலுத்திக் கொண்டார். மேலும், அனைவரையும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தினார். இந்நிலையில் கரோனா தடுப்பூசி இரண்டாவது தவணையை முதல்வர் ரங்கசாமி தனது இல்லத்தில் நேற்று செலுத்திக் கொண்டார். தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின், அரை மணி நேரம் சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணிப்பில் அவர் இருந்தார். இத்தகவலை முதல்வர் அலுவலகத் தரப்பில் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

உலகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்