புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கடந்த மே மாதம் 9-ம் தேதி கரோனாவால் பாதிக்கப்பட்டு, சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டார். சிகிச்சை முடிந்து மே மாதம் 17-ம் தேதி வீடு திரும்பினார். சிகிச்சை முடிந்து 3 மாதங்களுக்குப் பிறகு கோவி ஷீல்ட் கரோனா தடுப்பூசி முதல் தவணையை கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி செலுத்திக் கொண்டார். மேலும், அனைவரையும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தினார். இந்நிலையில் கரோனா தடுப்பூசி இரண்டாவது தவணையை முதல்வர் ரங்கசாமி தனது இல்லத்தில் நேற்று செலுத்திக் கொண்டார். தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின், அரை மணி நேரம் சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணிப்பில் அவர் இருந்தார். இத்தகவலை முதல்வர் அலுவலகத் தரப்பில் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
உலகம்
7 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
8 hours ago
சினிமா
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago