விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலின் முகப்பில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம் : சாலை மறியலிலும் தீக்குளிக்கும் முயற்சியிலும் ஈடுபட்ட ஆக்கிரமிப்பாளர்கள்

By செய்திப்பிரிவு

விருத்தாசலத்தில் பழமை வாய்ந்த விருத்தகிரீஸ்வரர் கோயில் 17 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இக்கோயிலைச் சுற்றி சுமார் 100 கடை கள் உள்ளன. இந்தக் கடைகள் மூலம் கோயிலுக்கு வருவாய் கிடைக்கிறது.

கோயிலின் கிழக்கு வாயில் மண்டபப் பகுதியில் ராஜகோபுரம் உள்ளிட்ட கலையம்சங்களை மறைத்து சிலர், வணிக வளாகம் கட்டியுள்ளனர்.

கோயில் மண்டபப் பகுதியில்கடைகள் எதுவும் அமைக்கக் கூடாது என இந்து சமய அறநிலையத்துறை ஏற்கெனவே ஆணை பிறப்பித்தது. ஆக்கிரமிப்பு கள் அகற்றப்படாத நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. ஆக்கிர மிப்புகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் ஓராண்டுக்கு முன்உத்தரவு பிறப்பித்தது. அதன்படி,ஆக்கிரமிப்புகளை அகற்ற முன்வந்த போது, 7 நாட்களில் கடைகளை காலி செய்வதாக ஆக்கிர மிப்பாளர்கள் உறுதியளித்தனர்.

இதனிடையே, பிப்ரவரி 6-ம் தேதி கோயில் குடமுழுக்கு நடத்தமுடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்குமுன் ஆக்கிரமிப்புகளை அகற்றகடந்த 1-ம் தேதி ஆணைப் பிறப்பிக்கப்பட்டது. ஆக்கிரமிப்பாளர் களுக்கு முறையாக நோட்டீஸ் வழங்கப்பட்டும், அகற்ற முன்வர வில்லை.

இந்நிலையில் நேற்று அறநிலையத்துறை உதவி ஆணையர் பரணிதரன், கோயில் செயல் அலுவலர் முத்துராஜா முன்னிலையில்,வட்டாட்சியர் சிவக்குமார், ஆய்வா ளர் விஜயரங்கன் உள்ளிட்டோர் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதற்கு ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்து, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி, தீக்குளிக்க முயன்றனர். போலீஸார் அவர்களை தடுத்து, காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். தொடர்ந்துசாலை மறியலிலும் ஈடுபட்டனர்.போலீஸார் அவர்களை அப்புறப்ப டுத்தி, ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

10 mins ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

59 mins ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்