அஞ்செட்டி அருகே சேசுராஜபுரம் அடுத்துள்ள காந்திநகர் கிராமத்தில் கஞ்சா செடிகளை பயிரிட்டுள்ளதாக அஞ்செட்டி போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் அஞ்செட்டி காவல் நிலைய ஆய்வாளர் குமரன் தலைமையிலான போலீஸார் காந்திநகர் கிராமத்தில் சோதனை மேற்கொண்டனர். இச்சோதனையில் காந்திநகர் கிராமத்தைச் சேர்ந்த மயில்சாமி (35), தனது தோட்டத்தில் துவரை பயிர் நடுவே கஞ்சா செடிகளை பயிரிட்டிருந்தது தெரியவந்தது. மேலும் அதே கிராமத்தைச் சேர்ந்த அய்யண்ணன் (50) என்பவரும் தனது தோட்டத்தில் கஞ்சா செடிகளை ஊடுபயிராக பயிரிட்டு இருப்பதை கண்டுபிடித்தனர்.
சட்டவிரோதமாக கஞ்சா செடிகளை பயிரிட்டதற்காக மயில்சாமி மற்றும் அய்யண்ணன் ஆகிய இருவரையும் அஞ்செட்டி போலீஸார் கைது செய்தனர். தோட்டத்தில் வளர்ந்திருந்த 60 கஞ்சா செடிகளையும் அகற்றிய போலீஸார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
21 mins ago
தமிழகம்
11 mins ago
இந்தியா
29 mins ago
வாழ்வியல்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
உலகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
சுற்றுச்சூழல்
3 hours ago
தமிழகம்
2 hours ago
சினிமா
3 hours ago