அஞ்செட்டி அருகே தோட்டத்தில் கஞ்சா பயிரிட்ட இருவர் கைது :

By செய்திப்பிரிவு

அஞ்செட்டி அருகே சேசுராஜபுரம் அடுத்துள்ள காந்திநகர் கிராமத்தில் கஞ்சா செடிகளை பயிரிட்டுள்ளதாக அஞ்செட்டி போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் அஞ்செட்டி காவல் நிலைய ஆய்வாளர் குமரன் தலைமையிலான போலீஸார் காந்திநகர் கிராமத்தில் சோதனை மேற்கொண்டனர். இச்சோதனையில் காந்திநகர் கிராமத்தைச் சேர்ந்த மயில்சாமி (35), தனது தோட்டத்தில் துவரை பயிர் நடுவே கஞ்சா செடிகளை பயிரிட்டிருந்தது தெரியவந்தது. மேலும் அதே கிராமத்தைச் சேர்ந்த அய்யண்ணன் (50) என்பவரும் தனது தோட்டத்தில் கஞ்சா செடிகளை ஊடுபயிராக பயிரிட்டு இருப்பதை கண்டுபிடித்தனர்.

சட்டவிரோதமாக கஞ்சா செடிகளை பயிரிட்டதற்காக மயில்சாமி மற்றும் அய்யண்ணன் ஆகிய இருவரையும் அஞ்செட்டி போலீஸார் கைது செய்தனர். தோட்டத்தில் வளர்ந்திருந்த 60 கஞ்சா செடிகளையும் அகற்றிய போலீஸார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

21 mins ago

தமிழகம்

11 mins ago

இந்தியா

29 mins ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

உலகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

மேலும்