கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொடிநாள் விழாவின் போது முப்படை வீரர்களின் நலன் கருதி தாராளமாக நன்கொடை அளிக்க வேண்டும் என ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நம் நாட்டு எல்லைகளைப் பாதுகாக்கும் புனிதப் பணியில் ஈடுபட்டுள்ள முப்படை வீரர்களை பாராட்டவும், போரிலும், போர் தொடர்பான நடவடிக்கைகளிலும் இன்னுயிர் இழந்த தியாகிகளையும், விழுப்புண் பெற்ற வீரர்களையும் நெஞ்சார நினைவு கூறும் வகையிலும் கொடிநாள் விழா ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 7-ம் தேதி உண்டியல் மூலம் நிதி வசூல் செய்யப்படுகிறது. இவ்வாறு திரட்டப்படும் நிதியானது போரில் உயிர் நீத்த தியாகிகளின் குடும்பத்தைச் சார்ந்தோரின் நலன் பேணப் பயன்படுத்தப்படுகிறது. அதன்படி இவ்வாண்டும் வரும் டிசம்பர் 7-ம் தேதி காலை 10.30 மணியளவில் உண்டியல் மூலம் வசூல் தொடங்கி வைக்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் அனைவரும் நம் நாட்டைக் காத்த முப்படை வீரர்களின் நலன் கருதி தாராளமாக நன்கொடையளித்து உதவ வேண்டும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
இந்தியா
5 hours ago
தமிழகம்
5 hours ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
6 hours ago
விளையாட்டு
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
உலகம்
8 hours ago
ஆன்மிகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago