ஜெய்பீம் படக்குழுவினர் மீது வன்னியர் சங்கத்தினர் வழக்கு : சிதம்பரம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்பு

By செய்திப்பிரிவு

‘ஜெய் பீம்’ படத்தில் வன்னியர் சமுதாயத்தை இழிவு படுத்திய தாகக்கூறி தமிழகம் முழுவதும் பாமகவினர், வன்னியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று, வன்னியர் சங்க மாநிலத் தலைவர் பு.தா. அருள்மொழி சார்பில் வழக்கறிஞர் மகேந்திரன் சிதம்பரம் 2-ம் எண் குற்றவியல் நடுவர் மன்றத்தில் ‘ஜெய் பீம்’ படக்குழுவினர்களான 2 டி நிறுவனம், நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா, இயக்குநர் ஞானவேல் மற்றும் அமேசான் நிறுவனம் ஆகியவை மீது இரு சமூகத்தினர் இடையே வன்முறையை தூண்டு வது, அவதூறு பரப்பியது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்கு தாக்கல் செய் யப்பட்டது. வழக்கை ஏற்றுக் கொண்ட நடுவர் சக்திவேல் வரும்25-ம் தேதிக்கு வழக்கு விசார ணையை தள்ளிவைத்தார்.

இது குறித்து மாநில வன்னியர்சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி கூறுகையில், “வன்னியர்களின் புனித சின்னமான அக்னி கலசத்தை இப்படத்தில் தவறாக சித்தரித்துள்ளனர். படத்தில் வரும்உதவி ஆய்வாளர் கதாபாத்திரத் தின் பெயரை வேண்டுமென்றே குருமூர்த்தி என்று மாற்றி வைத் துள்ளனர்.

படத்தின் இயக்குநர் பெதுவாக மன்னிப்பு கேட்டதை ஏற்றுக் கொள்ள முடியாது. நடிகர் சூர்யாநேரடியாக வன்னியர் சங்கத்திட மும், பாமகவிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 mins ago

இந்தியா

15 mins ago

இந்தியா

21 mins ago

இந்தியா

28 mins ago

தமிழகம்

21 mins ago

இந்தியா

39 mins ago

க்ரைம்

56 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

55 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

மேலும்