தேன்கனிக்கோட்டை ரவுடி கொலையில் ஓசூர் நீதிமன்றத்தில் 2 பேர் சரண் :

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அடுத்த தக்கட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சுரேஷ் (எ) கொம்பன் (33). இவர் மீது கொலை உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவரது நண்பரான மாரசந்திரத்தைச் சேர்ந்த மகேஷ்குமார் (எ) மகேஷ் (34) மீதும் கொலை உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் கடந்த 20-ம் தேதி மாரச்சந்திரத்தில் உள்ள சாவடியில் ஏலச்சீட்டு நடந்தது.

அப்போது சுரேஷுக்கும், மகேஷ்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மகேஷ்குமார், தனது நண்பர்களுடன் சேர்ந்து சுரேஷை கொலை செய்தார். இதுதொடர்பாக தேன்கனிக்கோட்டை போலீஸார் கொலை வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்நிலையில், மகேஷ்குமார், தேன்கனிக்கோட்டை தேர்ப்பேட்டையைச் சேர்ந்த சிவா (32) ஆகிய 2 பேர், ஓசூர் விரைவு நீதிமன்றத்தில் நேற்று காலை சரணடைந்தனர். பின்னர், 2 பேரும் தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். இக்கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீஸார் தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

18 mins ago

விளையாட்டு

41 mins ago

தமிழகம்

41 mins ago

தொழில்நுட்பம்

1 hour ago

சினிமா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

வணிகம்

1 hour ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

உலகம்

2 hours ago

மேலும்