பாம்பாற்றில் இழுத்து செல்லப்பட்ட கல்லூரி மாணவரை தேடும் பணி தீவிரம் :

By செய்திப்பிரிவு

கதவணிபுதூர் பாம்பாற்றில் கடந்த 3 நாட்களாக அதிக அளவில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது. நேற்று முன்தினம் அதே பகுதியைச் சேர்ந்த தனியார் நர்சிங் கல்லூரி மாணவர் விக்னேஷ் (19) என்பவர் தனது நண்பர்களுடன் ஆற்றில் செல்லும் தண்ணீரை வேடிக்கை பார்க்கச் சென்றார். அப்போது, விக்னேஷ் செல்ஃபி எடுத்துக் கொண்டு மீன் பிடித்ததாக கூறப்படுகிறது. இதில், எதிர்பாராதவிதமாக அவர் தவறி விழுந்து ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டார். தகவல் அறிந்து அங்கு சென்ற ஊத்தங்கரை தீயணைப்பு துறையினர் அவரை ஆற்றில் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், அவர் கிடைக்கவில்லை.

நேற்று 2-வது நாளாக அவரை தேடும் பணி நடைபெற்றது. புதூர் பகுதியில் இருந்து பாம்பாறு அணை செல்லும் வழியில் உள்ள கீழ்மத்தூர், கோவிந்தாபுரம், வண்ணாம்பள்ளி ஆகிய பகுதிகளில் ஆற்றங்கரையோரங்களில் அவரை தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 mins ago

வணிகம்

31 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

சுற்றுலா

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்