புதுப்பாளையம் அருகே இளைஞரை கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான 6 இளைஞர்கள் உட்பட 7 பேரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் அடுத்த வீரானந்தல் கிராமத்தில் வசித்தவர் ஆறுமுகம் மகன் வெங்கடேசன். இவர், கடந்த செப்.17-ம் தேதி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து புதுப்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து செங்கம் அடுத்த ஜிஎன் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மதி (25), வசந்த்(24), சுரேஷ்(32), வல்லரசு(24), புதுப்பாளையத்தில் வசித்த வினோத்(25), ஏழுமலை (24) ஆகிய 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் கைது செய்யப்பட்ட 6 பேரும் ஏற்கெனவே குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டிருந்ததால், அவர்களது சட்ட விரோத செயலை தடுக்கும் வகையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் பரிந்துரையின் பேரில் குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 6 பேரிடம், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான ஆணையை புதுப்பாளையம் காவல்துறையினர் நேற்று வழங்கினர்.
இதேபோல், தண்டராம்பட்டு அடுத்த தானிப்பாடி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தவர்களிடம் கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கீழ்ராவந்தவாடி கிராமத்தில் வசிக்கும் விஜியை, ஆட்சியரின் உத்தரவின் பேரில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
முக்கிய செய்திகள்
உலகம்
5 mins ago
சினிமா
56 mins ago
வலைஞர் பக்கம்
59 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
ஓடிடி களம்
2 hours ago