கன்னியாகுமரி மாவட்ட உணவு பாதுகாப்புதுறை சார்பில் உலக உணவு தினம், உலக அயோடின் பற்றாக்குறை குறைபாடுகள் தடுப்பு தினம் ஆகியவை நாகர்கோவில் டதி பள்ளியில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் உணவில் எளிய முறையில் கலப்படத்தை கண்டறிதல் பற்றிய கண்காட்சியை நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் தொடங்கி வைத்து, உணவின் முக்கியத்துவம் குறித்தும், உணவை வீணாக்குவதை தவிர்ப்பது குறித்தும் பேசினார். நாகர்கோவில் மாநகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் குமாரபாண்டியன் கலப்பட உணவை கண்டறியும் முறை குறித்து விளக்கினார்.
உணவு பாதுகாப்பு அலுவலர் சங்கரநாராயணன் தலைமையில் மாணவ, மாணவிகள் அயோடின் பற்றாக்குறைபாடு தடுப்பு தின உறுதிமொழி எடுத்துகொண்டனர். உலக உணவு தினம், அயோடின் பற்றாக்குறை தடுப்பு தினம் தொடர்பாக நடந்த கட்டுரை, பேச்சு மற்றும் ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாநகராட்சி ஆணையர், ஜெனட் வசந்தகுமாரி ஆகியோர் பரிசு வழங்கினர். நிகழ்ச்சியில் திரளான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
விளையாட்டு
10 hours ago
சினிமா
11 hours ago
இந்தியா
12 hours ago
தமிழகம்
13 hours ago