திருப்பூர்: திருப்பூர் போயம்பாளையம் அவிநாசி நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (62). கணபதிபாளையத்தை சேர்ந்தவர் செந்தில்பிரபு (41). இருவரும், நூல் வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில், தனியார் நூற்பாலையில் பணிபுரியும் மேலாளர் குமார் (41) என்பவரிடம், ரூ.7 லட்சத்து 30 ஆயிரத்துக்கு நூல் வாங்கி உள்ளனர். அதற்கான பணத்தை 2 ஆண்டுகளாக கொடுக்காமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது. செந்தில்பிரபுவிடம் குமார் பணம் கேட்டபோது, செல்வராஜிடம் பணம் உள்ளதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து குமார், அவரது நண்பர் ராஜேந்திரன் (41), செந்தில்பிரபு ஆகிய 3 பேரும் சேர்ந்து செல்வராஜிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர். பணம் தராததால், செல்வராஜை கடத்திச் சென்றனர். செல்வராஜின் மகன் குருபிரசாத் அளித்த புகாரின்பேரில் அனுப்பர்பாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதையடுத்து 3 பேரையும் கைது செய்து, செல்வராஜை போலீஸார் மீட்டனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
3 hours ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
5 hours ago
சினிமா
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
7 hours ago
தமிழகம்
9 hours ago