திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணனிடம், மாவட்ட அதிமுக செயலாளர் கணேசராஜா, ராதாபுரம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை ஆகியோர் அளித்த மனு:
ஊரக உள்ளாட்சி தேர்தலில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தின்போது திசையன்விளையில் அமைச்சர்கள் கீதாஜீவன், ஐ. பெரியசாமி ஆகியோருடன் வந்தவர்கள் அதிமுகவினரை தாக்கினர். இது தொடர்பாக அளித்த புகார் மனு மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் ஆவரைக்குளம் பால்துரை உட்பட 4 பேர் மீது பழவூர் காவல் நிலையத்தில் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பொய் புகார் ஆகும்.
வாக்கு எண்ணிக்கையின்போது அதிமுக நிர்வாகிகள் பங்கேற்கக்கூடாது என்ற எண்ணத்தில் இந்தபொய் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புகார் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது கண்டிக்கத்தக்கது.
மேலும் கடந்த 2 நாட்களுக்கு முன் காவல்கிணறு சந்திப்பில் நள்ளிரவில்பாஜக நிர்வாகி பாஸ்கர் என்பவரைதாக்கியது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் உடனடியாக ஞானதிரவியம் எம்.பி.யை கைது செய்ய வேண்டும். வாக்கு எண்ணிக்கையின் போதுஅதிமுக வேட்பாளர்களுக்கு போதியபாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
32 mins ago
உலகம்
5 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
6 hours ago
சினிமா
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
9 hours ago