வடலூரில் நண்பர்களுடன் குட்டை யில் குளித்த பள்ளி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
வடலூர் மாருதி நகரைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் எடிசன் (15). இவர் நெய் வேலியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று இவர் நண்பர்களுடன் வடலூர் அருகில் நெய்வேலி முதல் சுரங்கம் அருகிலுள்ள கல்லுக்குழி குட்டையில் குளித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக நீரில் முழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வடலூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
11 mins ago
தமிழகம்
55 mins ago
விளையாட்டு
3 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
சினிமா
5 hours ago
இந்தியா
6 hours ago
வணிகம்
13 hours ago
சுற்றுச்சூழல்
6 hours ago