300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் :

By செய்திப்பிரிவு

ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை ரயில் நிலையம் 2-வது நடைமேடையில் ரயில்வே காவல் ஆய்வாளர் ரத்தினகுமார் தலைமையில், ரயில்வே காவல்துறையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் லால்பார்க் விரைவு ரயில் அங்கு வந்தது. அதில், முன்பதிவு பெட்டியில் ரயில்வே காவல் துறையினர் சோதனை நடத்தியபோது, அங்கு பயணிகள் இருக்கைக்கு அடியில் 300 கிலோ ரேஷன் அரிசி கர்நாடகா மாநிலத்துக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, அந்த அரிசியை ரயில்வே காவல் துறையினர் பறிமுதல் செய்து அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

ஜோதிடம்

56 mins ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

6 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

10 hours ago

வலைஞர் பக்கம்

11 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்